Wednesday, May 14, 2014

************************************************************************************************

ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும், வார, ராசி, நட்சத்திர கோசார பலன்களையும், எந்த நேரத்தில் என்ன செய்யலாம்? 
எந்தெந்த நேரங்களை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு ஜோதிட சாஸ்திரம் வழிகாட்டுகிறது.
அந்த வகையில் சந்திராஷ்டமம் என்ற அமைப்பு சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது. 
சந்திரன் ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என்கிறோம். 
இது ஒருவருக்கு என்ன செய்யும் என்பதை காணலாம். 

சந்திரனின் முக்கியத்துவம்
-------------------------------------------
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். 
இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். 
ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். 
சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். 
அதே நேரத்தில் குரு இருக்கும் இடத்தையோ, ராகு-கேது இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. 
இதில் இருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். 
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் திருமண பொருத்தம் பார்க்கிறோம். 
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம். சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோசார பலன்களை பார்க்கிறோம். 
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தில்தான் கோயிலில் அர்ச்சனை வழிபாடுகள் செய்கிறோம். 
சந்திரன் மூலம்தான் நம் ஜாதகத்தில் யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன. 
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நெருக்கடியான, அவயோக, இடையூறு ஏற்படுகிறது. 
அதுதான் சந்திராஷ்டமம் ஆகும். 

நீங்கள் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். 
இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். 
சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். 
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம். 
அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.
பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். 
மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. 
ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். 
மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.
கிரகப்பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். 
முக்கிய பேச்சுவார்த்தைகளை தொடங்க மாட்டார்கள். 
பிரயாணங்கள் செய்வது, புதிய வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பதும் நலம் தரும்.
சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. 
எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. 
டென்ஷன், கோபதாபங்கள், வாக்குவாதம், மறதி, படபடப்பு, சிடுசிடுப்பு உண்டாகிறது.
இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம். 
ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும், செயல்களிலும், கருத்துக்களிலும் நிதான மற்ற நிலை உண்டாகிறது. 
சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. 

சந்திரன் இருக்கும் இடம்
சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். 
இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது. 
அதே நேரத்தில் லாப நஷ்டங்கள், நிறை குறைகள், சிந்தனை, கோபதாபம், உற்சாகம், வீண் அலைச்சல், பயணங்கள், காதல், காமம் என்று கலவையான பலன்கள் உண்டாகிறது. நாம் பிறந்த ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை காணலாம்.
சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும் போது, மனம் அலைபாயும். 
சிந்தனை அதிகரிக்கும். 
ஞாபக மறதி உண்டாகலாம். 
வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நலம் தரும். 

இரண்டாம் ராசியில் இருக்கும் போது, 
பணவரவு உண்டு. 
பேச்சில் நளினமிருக்கும். 
வேகம், விவேகம் இருக்கும். 
கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும். 

மூன்றாம் ராசி : 
சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள், உற்சாகம். 

நான்காம் ராசி :
பயணங்கள், மனமகிழ்ச்சி, தாய்வழி ஆதரவு, உடல் ஆரோக்கியம். 

ஐந்தாம் ராசி : 
நல்ல எண்ணங்கள், ஆன்மிக பயணங்கள், தெய்வபக்தி, தெளிந்த மனம், தாய்மாமன் உதவி. 

ஆறாம் ராசி : 
எரிச்சல், டென்ஷன், கோபதாபங்கள், மறதி, வீண்செலவுகள், காயம் ஏற்படுதல். 

ஏழாம் ராசி : 
பயணங்கள், உற்சாகம், நண்பர்கள் சேர்க்கை, சுற்றுலா, பெண் சுகம்.

எட்டாம் ராசியில் இருக்கும் நாளைத் தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். 
இந்நாளில் மவுனம் காத்தல் நல்லது. 
தியானம் செய்யலாம். 
கோயில், குளம் என்று சென்று வரலாம். 
கொடுக்கல், வாங்கல், வீண் விவாதங்களை தவிர்ப்பது அவசியம். 

ஒன்பதாம் ராசி : 
காரிய வெற்றி, நல்ல தகவல், குதூகலம், ஆலய தரிசனம், முக்கிய முடிவுகள். 

பத்தாம் ராசி : 
பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு, அலைச்சல், உடல் உபாதைகள். 

பதினொன்றாம் ராசி : 
தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, தரும சிந்தனை, அமைதியான மனம். 

பனிரெண்டாம் ராசி : 
அலைச்சல், டென்ஷன், கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள், செலவுகள். 

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. 
அந்த குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும். 
உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அனுஷம் நட்சத்திரம் வரும் நாள் சந்திராஷ்டம தினமாகும். 

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்
உங்களுக்குரிய சந்திராஷ்டம தினத்தை எளிதில் தெரிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரம் வரும் நாளே சந்திராஷ்டம தினமாகும்.

பிறந்த நட்சத்திரம்    -    சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி    -    அனுஷம்
பரணி    -    கேட்டை
கிருத்திகை    -    மூலம்
ரோகிணி    -    பூராடம்
மிருகசீரிஷம்    -    உத்திராடம்
திருவாதிரை    -    திருவோணம்
புனர் பூசம்    -    அவிட்டம்
பூசம்    -    சதயம்
ஆயில்யம்    -    பூரட்டாதி
மகம்    -    உத்திரட்டாதி
பூரம்    -    ரேவதி
உத்திரம்    -    அஸ்வினி
அஸ்தம்    -    பரணி
சித்திரை    -    கிருத்திகை
சுவாதி    -    ரோகிணி
விசாகம்    -    மிருகசீரிஷம்
அனுஷம்    -    திருவாதிரை
கேட்டை    -    புனர்பூசம்
மூலம்    -    பூசம்
பூராடம்    -    ஆயில்யம்
உத்திராடம்    -    மகம்
திருவோணம்    -    பூரம்
அவிட்டம்    -    உத்திரம்
சதயம்    -    அஸ்தம்
பூரட்டாதி    -    சித்திரை
உத்திரட்டாதி    -    சுவாதி

ரேவதி    -    விசாகம்

Friday, February 21, 2014

ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் 
*************************** 

























ஸ்ரீ லட்சுமி சங்கு எனப்படும் வலம்புரிச் சங்கை வீட்டிற்குக் கொண்டுவந்து அதைக் கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி நமது வீட்டில் என்றும் இருந்து, நமக்கு நன்மைகள் தரப் பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும். 


ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீதர
கரஸ்தாய பயோநிதி ஜாதய
ஸ்ரீதக்ஷ்ணாவர்த்த சங்காய
ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ கராய பூஜ்யாய நமஹ



நாம் வாங்கி வந்த சங்கை, ஒரு நதிநீரை விட்டு சுத்தமாகக் கழுவி மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் ஆகியவற்றால் அலங்கரித்து, தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி மேற்கூறிய மந்திரத்தை 11 முறைகள் சொல்லி வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

பெரிய பூஜா முறைகள் எதுவும் செய்யாவிடினும் கூட தினமும் ஒரு ஊதுபத்தியாவது காட்டி மேற்கண்ட ஸ்துதியை இயன்ற அளவு சொல்லி வணங்கி வரலாம்.

Thursday, February 20, 2014

மூன்றாவது கண்ணை திறக்கும் ஸ்ரீ சக்கரம் !!!! 
******************************************* 
அம்மையும் அப்பனும் இந்த பிந்து பகுதியில் ஒன்றாக 
**************************************************
இணைந்து நிற்கிறார்கள் ! 
************************ 




உலக அன்னையின் திருவுருவத்தை சனாதனமான இந்து மதத்தின் சாக்த பிரிவு மூன்று நிலையாக வகைப்படுத்துகிறது.

முதலில் ஸ்தூல வடிவம் 
இரண்டாவது சூட்சம வடிவம்
மூன்றாவது காரண வடிவம்
என்பதாகும்.

* ஸ்தூல வடிவம் என்பது பாசம், அங்குசம், கரும்பு வில், மலர் அம்பு ஆகியவற்றை கொண்டு இடது பாதத்தை ஊன்றியும், வலது காலை மடித்தும் அமர்ந்திருக்கும் திருக்கோலமாகும்.

* சூட்சம வடிவம் என்பது புகழ் பெற்ற ஸ்ரீ யந்திரம் என்ற ஸ்ரீ சக்ர வடிவாகும்.

* காரண வடிவம் என்பது ஸ்ரீ அன்னையின் மூல மந்திர ஒலிவடிவமாகும்.

மோகினி ஹிருதயம் எனும் நூல் ஸ்ரீ சக்ர வடிவை பற்றி மிக எளிமையாகவும் தெளிவாகவும் பல விவரங்களை நமக்கு தெரிவிக்கிறது.
இந்த நூலை வாமகேஷ்வர தந்திரம் என்று வேறொரு பெயராலும் அழைக்கிறார்கள்.
இதில் தந்திர மார்க்கம் சார்ந்த உபாசன முறைகள் விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சக்ரம் என்பது பிரபஞ்சவெளியில் எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளின் தன்மையை ஒருமை பாட்டை விளக்குவதே ஆகும்.
இந்த விளக்கத்தை ஒவ்வொரு மனிதனும் நன்கு விளங்கிகொள்ள ஒன்பது நிலைகளை கடந்து செல்ல வேண்டும்.
அதாவது மனிதனுக்கும் பிரம்மத்திற்கும் இடையில் ஒன்பது மறைப்புகள் உள்ளன.
இந்த் மறைப்புகளை ஸ்ரீ சக்ர தத்துவம் ஒன்பது ஆவரணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது

ஸ்ரீ சக்ரம் என்பது எல்லை இல்லாத பிரபஞ்சத்தை குறிப்பதாகும்.
அண்டவெளிக்கு துவக்கமும் கிடையாது.
முடிவும் கிடையாது.
அப்படி பட்ட அண்டத்தின் ரகசியத்தை மனித அறிவால் எக்காலத்திலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. அப்படி முடியாத விஷயத்தை அறிந்து கொள்ள அக்கால ரிஷிகளும் முனிவர்களும் முயற்சித்து கண்டறிந்த மெய்ஞான ரகசிய வடிவமே ஸ்ரீ சக்ரமாகும்.

இதை ஒரு பிரபஞ்ச கணித கண்டுபிடிப்பு என்றும் சொல்லலாம்.

ஒரு புள்ளிக்கு 360 பாகைகள் உண்டு.
ஒவ்வொரு தனித்தனி பாகையில் இருந்து புறப்படும் கோடுககள், பிரபஞ்சவெளியில் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே செல்லும்.
அந்த கோடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் அதாவது புறப்பட்ட இடத்திலேயே வந்து சேர்வதால், வட்டமாகவோ, கோளமாகவோ தோற்றம் அளிக்கும்.
அந்த வடிவத்தை இரண்டு பாகமாக பிளந்தால் 180 பாகைகள் கொண்ட அரைவட்டம் கிடைக்கும்.
நான்காக பகிர்ந்தால் ஒவ்வொரு பகுதிக்கும் 90 பாகைகள் பிரிந்து நான்கு துண்டுகளாக விரிவடையும்.
இப்போது அந்த தோற்றத்தை பார்த்தால் ஒரு கூட்டல் குறியை போல நம் கண்ணுக்கு தெரியும்.
இது தான் சிவ சக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடாக அமையும். அது தான் பிரபஞ்சத்தின் அக்ஷர வடிவாகும்.

இந்த அக்ஷர வடிவம் 'க' என்ற எழுத்தாக அமைந்திருக்கிறது. இந்த எழுத்து வடிவம் தான் படைப்பு தத்துவத்தின் வெளிப்புற சின்னமாகும்.
எல்லையே இல்லாத பிரபஞ்சம் 'க' வடிவ சதுரத்துக்குள் காணப்படுகிறது.
இந்த சதுரத்தில் அணிமா, லகிமா, மகிமா, பிரத்தி, பிராம, வசித்துவம், சத், சித்துவம் என்ற அஷ்டமா சித்துகள் அடங்கியிருந்து ஆட்சி செய்கிறது.

இந்த சகரத்தில் உள்ள நான்கு புற சதுர ரேகைகளும் அண்ட வெளியை காவல் செய்யும் லோக பாலகர்களாக உருவகப்படுத்தப்பட்டு நிர்மானிக்கப்படுகிறார்கள்.

இச்சக்கிரத்தின் உள் வரிகளில் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு குணங்களை கட்டுப்படுத்தும் பண்பு மற்றும் அறிவு ஆகிய இரண்டு நற்குணங்கள் மறைந்துள்ளன.
இதை பிரகட யோகினிகள் என்று அழைக்கிறார்கள்.

நிலையான பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தால் வட்டத்திற்குள் சதுரம் தோன்றும்.
ஸ்ரீ சக்ர சதுரத்திற்குள் இதே போன்று தான் வட்டம் தோன்றுகிறது.
இது நமது கண்களில் உள்ள கருவிழிகள் போல் தெரிவதால் அண்டத்தின் ஒத்தைக் கண் எனவும் சுதர்மம் என்னும் அண்ட கருவாகவும் கருதப்படுகிறது.

சதுரம் என்பது ஆகாச வெளியினையும்,
வட்டம் என்பது ஆகாச காலத்தையும் குறித்து நிற்கிறது.

வெளி என்ற சதுரம் வளர்ந்து கொண்டே செல்கிறது.
காலம் என்ற வட்டம் சுழன்று கொண்டே செல்கிறது.

பார்வையை இன்னும் சற்று கூர்மை படுத்தி வட்டத்தை பார்த்தோம் என்றால் வட்டத்திற்குள் வட்ட வட்டமாக மூன்று வட்டங்கள் தோன்றும்.
இதில் இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதிதேவன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திக்கின் அதிபதிகள் நிற்கிறார்கள்.

ஒரு சதுரத்தில் அதற்குள் இருக்கும் வட்டத்தை அதாவது சதுரமான அண்டவெளியும் அதற்குள் இருக்கும் பூகோளத்தையும் எட்டு பாகமாக்கி அஷ்டதிக்கிலும் பிரபஞ்சம் பறந்து விரிந்துள்ளதை ஸ்ரீ சக்ர குறியீடுகள் காட்டுகின்றன.

ஸ்ரீ சக்ரத்தின் வட்டத்தில் உள்ள நடுவட்டம் அகமுகமான வழிபாட்டால் பெருகக்கூடிய கொல்லாமை, வெகுளாமை, புலனடக்கம், பொறுமை, தவம், வாய்மை, அன்பு ஆகிய நற்குணங்களை வரிசைபடுத்தி காட்டுகிறது.

அதற்கு அடுத்த வட்டத்திற்குள் மனிதனின் 360 சுவாச கூறுகளான காலம் நிற்கிறது.

இந்திய நாள்கணக்கு படி ஒரு நாளைக்கு அறுபது நாழிகைகள் உண்டு.
ஒரு நாழிகையில் அதாவது 24 நிமிடத்தில் ஒரு மனிதன் விடும் சுவாசத்தின் எண்ணிக்கை 360.
இந்த 360தை 60 நாழிகையால் பேருக்கும் போது சராசரியாக ஒரு மனிதனின் தினசரி சுவாசம் 21.600 ஆகும்.
ஒவ்வொரு நாழிகைக்கான 360 சுவாசத்தை பாகங்களாக கொண்டோம் என்றால் அது ஒரு வட்டமாக வரும்.
இந்த பாகம் காலத்தை குறிப்பதாகும்.

இந்த காலம் என்னும் உள் வட்டம் கிருதயுகம்(அ) திருதயுகம் (அ) திரேதாயுகம் 2. திரேதாயுகம் 3. துவாபரயுகம் 4. கலியுகம் ஆகிய நான்கு யுகங்களாக சுழன்று வருகிறது.

இப்படி வட்டமும் சதுரமும் அண்டவெளியாகவும் காலமாகவும் விளங்கி மூலாதாரத்தில் கனலாக வடிவெடுக்கிறது.
இதை நெருப்புக்குள் நெருப்பு அல்லது சிவத்துக்குள் சக்தி அல்லது சகதிக்குள் சிவம் என்றும் சொல்லாம்.
இந்த மூன்றாவது வட்டத்தில் பத்து இதழ் கொண்ட தாமரை ஸ்ரீ சக்ரத்தில் மலர்கிறது.

பதினாறு இதழ்கள் பிறக்கும் சக்ர பகுதியை சர்வ பரிபுரா சக்ரம் என்ற அழைக்கிறார்கள்.
இந்த ஒவ்வொரு இதழ்களிலும் அன்னையின் பதினாறு யோகினி சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த சக்திகள் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும். தேவதைகள் ஆவார்கள் யோக நெறியில் இந்த பகுதி சுவாதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது.

இதில் மனம், சித்து, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு அந்தகரணங்களும் பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உரைத்தல், நினைவு வைத்தல், கனைத்தல், சூட்சமம், சுக்குலம், காரணம், பெயர், வளர்ச்சி ஆகிய பனிரெண்டு தன்மாத்திரைகள் அடங்கியுள்ளன.

இத்தகைய பதினாறு இயல்புகளும் நிரம்பி இயங்கினால் தான் உலக வாழ்க்கைக்கு தேவையான உடல் நலம், மனநலம், அறிவு நலம், பண்பு நலம், சமூக நலம், பொருள் நலம் ஆகிய பெயர்கள் கிடைக்கும்.
அதனால் தான் இப்பகுதியை படைத்தல் தத்துவம் என்கிறார்கள்.

அடுத்ததாக பதினாறு இதழ் தாமரைக்குள் எட்டு இதழ் கொண்ட மூன்றாவது ஆபரணம் பிறக்கிறது.
இது சர்வ சம்மோகன சக்ரம் என்ற பெயர் கொண்டதாகும். எட்டு இதழ் கமலத்தில் எட்டு யோகினிகள் உள்ளதோடு அனங்க மன்மதன என்ற சக்திகளும் அருளாட்சி செய்கின்றன.
அனங்க என்றால் உருவம் இல்லாதது என்ற பொருள் வரும். அதனால் இந்த பிரபஞ்சமானது உருவம் இல்லாத பரப்ரம்மத்தில் இருந்து உதயமானது என்ற மூல கருத்து வெளிப்படுகிறது.
மேலும் இந்த எட்டு இதழ்களும் எட்டு பிரம்மாணங்களாகும். மேலும் இந்த சக்ரம் மனித உடலின் சதை பகுதியை குறிக்கிறது.

அடுத்ததாக உள்ள நான்காவது ஆவரணத்தில் கீழே எழும் மேலே ஏழும் ஆக பதினாறு உலகங்கள் அமைந்துள்ளன.
இதை சர்வ செளபாக்கிய தயகச்சக்கரம் என்று அழைக்கிறார்கள்.

மேலே உள்ள ஏழு கோணத்தில் பூர், பூவ, சுவ, ஜன, தப, சக், திய ஆகிய ஏழு உலகங்களையும் கீழே உள்ள ஏழு கோணங்கள் அதல, விதல, சுதல, நிதல, ரசாதல, மகாதல, பாதாள ஆகிய ஏழு உலகங்களையும் காட்டுகிறது.

அது மட்டும் அன்றி ஒலித்தத்துவமான சட்ஜமம், சமம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், விவாதம் ஆகிய ஏழு சப்த லயங்களையும், ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சி, சிவப்பு ஆகிய நிறதத்துவங்களையும் காட்டுகிறது.
அதாவது இறை சக்தி ஓசையாகவும் ஒளியாகவும் இருப்பதை இந்த கோணங்கள் விளக்குகின்றன.

ஐந்தாவது ஆவரணமான சர்வார்த்த சாதக சக்கரத்தில் கீழே ஐந்து கோணமும் மேலே ஐந்து கோணமும் உள்ளது.
இந்த பத்து கோணங்களும் மனித உடலில் உள்ள தச வாயுக்களை குறிக்கிறது.

ஸ்ரீ அன்னையை வழிப்படும் தசமகாவித்தியா தோற்றங்களை இது காட்டுவதாகவும் அமைந்துள்ளதாக கூறலாம்.

மேலும் மேலே உள்ள ஐந்து கோணங்கள் சரஸ்வதி, லஷ்மி, கெளரி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற அன்னையின் பஞ்ச வடிவங்களையும் கீழே உள்ள ஐந்து கோணங்கள் தத்புருஷம், சத்யோஜாதம், அகோரம், வாம, தேவம், ஈசானம் ஆகிய ஈஸ்வர பஞ்சப்ரம்ம வடிவத்தையும் காட்டுகிறது.

தேவியை வழிபடும் சர்வசோமணி, சர்வவிக்ஷிரவினி, சர்வாஷ்ணி, சர்வசந்தசர்வேசினி, மாதினி, சர்வமகோரங்குசா, சர்வகேச, சர்வபிகம்ப, சர்வயோனி, சர்வதிகண்டா ஆகிய பத்து மூர்த்திகளையும் இந்த கோணங்கள் காட்டுகின்றன.

இதே போல அன்னமய கோசம், ஞானமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்னும் ஐந்து உடல்களையும் அந்த உடல்களை தாக்கும் தோஷங்களான பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, திருடாமை, காமியாமை ஆகிய ஐந்து நெறிகளை சுட்டிக்காட்டுகிறது.

இப்பகுதி விந்து அணுக்களையும் கருமுட்டைகளையும் காட்டுவதாக தாந்திரிக தத்துவம் காட்டுகிறது

ஆறாவது ஆவரணமான சர்வஞசக்கரம், ஆஞ்சாசக்கரம் என்று அழைக்கப்படுகிறது.
இது உருவவழிபாட்டின் விளக்கமாகும்.

அன்னையானவள் சர்வத்தையும் அருளும் மூர்த்தியாகவும் திகழ்கிறாள்.
சர்வத்தையும் அழிக்கும் சக்தியாகவும் திகழ்கிறாள்.
உடல் இயக்க ரீதியில் இந்த ஆவரணம் எழும்பில் உள்ள மட்சையை குறிக்கும்.

சர்வரோகர சக்கரம் என்ற ஏழாவது ஆவரணம் பிந்துவை குறிப்பதாகும்.
இதில் எட்டு கோணங்கள் உண்டு.
இக்கோணங்கள் வசினி, காமேஸ்வரி, மோதினி, விமலா, அருணா, ஜெயினி, சர்வேஸ்வரி, கெளலனி ஆகிய வித்தைக்கும் ஞானத்திற்கும் உரிய தேவதைகள் வாசம் செய்கிறார்கள்.

இந்த அஷ்ட கோணத்தின் அதிதேவதை திரிபுரா ஆவாள்.

யோகமார்க்கத்தில் கூறப்படும் இயமம், நியமம், ஆசனம், பிரணாயமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி, ஆகிய எட்டு நிலைகளும் இதில் அடங்குகிறது.

மேலும் நூல்களை கற்றுத்தரும் போத குரு,
பேதங்களை அறிய செய்யும் வேதகுரு,
மந்திர சித்தி பெற வழிகாட்டும் மிசிதகுரு,
செயலுக்கம் தரும் சூட்ச்சக குரு,
வார்த்தைகளால் ஞானத்தை போதிக்கும் வாசககுரு,
தான் பெற்ற ஞானத்தை சுயநலம் இல்லாமல் சீடருக்கு தரும் காரககுரு,
முத்தியடைய வழிகாட்டும் விஷிதககுரு,
ஆகிய அஷ்டகுருக்களையும் இக்கோணங்கள் உணர்த்துகின்றன.

அன்னை ஆதிபராசக்தியின் நான்கு திருகரங்களும், அந்த கரங்களில் இருக்கும் பாசம், அங்குசம், கரும்பு வில்,
மலர் கணை ஆகிய நான்கு கருவிகளும் இந்த எட்டு கோணத்தின் வடிவங்கள் எனலாம்.

இதில் பாசம் என்பது ஆசையின் வடிவம்.
அங்குசம் என்பது கோபத்தின் வடிவம்.
கருப்பு வில் என்பது மனதின் வடிவம்.
மலர் கணை என்பது உணர்வுகளின் வடிவம்.

எட்டாவதாக உள்ள ஆவரணம் முக்கோணமாக அமைந்த காயத்திரி பீடமாகும்.
அன்னை இந்த காயத்திரி பீடத்தில் திரிபுராம்பா என்ற திருநாமத்தோடு அமர்ந்திருக்கிறாள்.
காமேசி, வச்சிரேசி, பகமாலினி என்ற மூன்று தேவதைகளையும் முக்கோணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்தி உள்ளாள்.
மனிதனை கடைநிலைக்கு தள்ளுகின்ற ஆணவம் கர்மா மாயை என்ற மும்மலங்களும் இச்சக்கரத்தை பூஜிப்பதினால் எரிந்து சாம்பலாகி விடுகிறது

சுழன்றடிக்கும் சூறாவளி என்ற பேராசை அடங்கி விடவும், ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் அனைத்தும் தவிடு பொடி ஆகிவிடவும், வயிரக்கியத்தை பெறவும், சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருக்கும் மனமென்னும் மாய பிசாசை வசக்கி ஒடுக்கி அன்னையின் திருபாதத்தில் பூர்ண சரணாகதி அடைய செய்யவும் இச்சக்கரம் வழிவகுக்கும்.

இறுதியாக சர்வானந்த மயசக்கரம் என்ற ஒன்பதாவது ஆவரணம்.
ஸ்ரீ சக்ரத்தின் மைய புள்ளியான பிந்து மையமாகும் இது. பேரானந்தம் அடையக்கூடிய அம்பிகையின் திருகாட்சியை நேருக்கு நேராக தரிசிக்கும் நிலையை காட்டுகிறது.

அம்மையும் அப்பனும் இந்த பிந்து பகுதியில் ஒன்றாக இணைந்து நிற்கிறார்கள்

இன்பம் துன்பமற்ற ஆழ்ந்த சமாதி நிலை பிந்து பகுதி காட்டும் சின்னமாகும்.

யோக மார்க்கத்தில் சொல்லப்படும் சமாதி நிலையின் மூன்றவது கண் திறக்கும் அனுபவமே ஸ்ரீ சகரத்தில் உள்ள மூல பிந்தாகும்.

Tuesday, February 18, 2014

கவலைகள் போக்கும் கணேச பஞ்சரத்னம்

pancha muga vinayagar
adi-sankara1
1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
    கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
    அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
    நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்


2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
    நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
    ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
    மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்


3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
    தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
    க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
    மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்


4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
     புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
     ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
     கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்


5. நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
    அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
    ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
    தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்


6. மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
    ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
    அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
    ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.




நாம் மேலே காண்பது கணேச பஞ்சரத்ன துதியாகும். 

இதனை இயற்றியவர் ஆதிசங்கரர் ஆவார்.  

இந்த கணேச பஞ்சரத்னத்தை தினமும் காலையில் கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்து வந்தால் நோயின்றி, குறையேதுமின்றி, நல்ல கல்வி, நன்மக்கட்பேறு, அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழலாம்.


கணேச பஞ்சரத்ன துதியின் ஒலி வடிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Friday, February 7, 2014

வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருக, பதவி உயர்வு கிடைக்க....


மந்திரம், ஸ்தோத்திரம், வழிபாடு 







வாழ்வில் நல்ல நிலையை அடைய யார் தான் விரும்ப மாட்டார்கள்?

குடும்பத்தில், என்றும் மங்கலம் பொங்க, லக்ஷ்மி கடாட்சம் பெருக, கடன், வறுமை, தரித்திரம் முற்றிலும் நீங்கி - ஒரு நல்ல முன்னேற்றம் அடைய சொல்ல வேண்டிய மந்திரங்கள்.

மந்திரம் 1
--------------
சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸீகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்

மந்திரம் 2
--------------
அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச் ரீயம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜீஷதாம்

இந்த இரண்டு மந்திரங்களையும் ஜபிக்கும்போது, லட்சுமியை வெள்ளைத் தாமரை மற்றும் குங்குமப்பூவால் அர்ச்சிக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்துவந்தால், மிக உயர்ந்த பதவி / பதவி உயர்வு கிடைக்கும்.

இந்த வழிமுறையை நமக்கு சித்விலாஸ விருத்தி என்ற நூல் சொல்லுகிறது.

Friday, January 31, 2014

புண்ணியகாலங்களில் தோன்றும் சாளக்கிராமம் !!!!





பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. இந்தப் பகுதி தான் சாளக்கிராமம் என்றழைக்கப்படுகிறது.
இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல் அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இங்குள்ள மூர்த்தியும் சாளக்கிராம வடிவத்தினர்தான்.
மூலவர் - ஸ்ரீமூர்த்தி                   வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.தாயார் - ஸ்ரீதேவி
தீர்த்தம் - சக்ர தீர்த்தம்                  கண்டகி நதி
விமானம் - கனக விமானம்காட்சி கண்டவர்கள் - பிரம்மா, சிவன், கண்டகி. 

சிறப்புக்கள் ----------------* சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக் கூடு, சங்கு போன்ற பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன. 
* மஹாவிஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து அதன் கர்ப்பத்தை அடைந்து அங்கு ரீங்காரமான சப்தத்தில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பலவிதமான சுருள் ரேகையுடன் கூடின பல சக்கரங்களை வரைந்து பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை (அதாவது தனது அவதார ரூபங்களை) பல வடிவங்களில் விளையாட்டாக வரைந்து வெகு காலத்திற்கு அங்கேயே இருந்து பின் மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. இப்பேர்ப்பட்ட வடிவங்களே நாம் சேவிப்பதற்கு உகந்தவையாகும். இவைகளில் ஸ்ரீமந் நாராயணனின் ஜீவரூபம் கலந்திருப்பதாக ஐதீஹம். இந்நிகழ்ச்சி (சாளக்கிராம உற்பத்தி) தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஐதீஹம். 
* சாளக்கிராமங்கள் உருண்டையான வடிவத்திலும் தட்டையான வடிவத்திலும் முக்கோணத்தில் பாதிக் கூறான அரை முக்கோண வடிவிலும் சங்கு, நத்தைக் கூடு வடிவிலும் சுருள் சுருளான ரேகைகளுடன் கூடினதாகவும், துவாரங்களுடன் கூடினதாகவும், இன்னும் வடிவு சொல்லவியலாத சில வடிவங்களிலும் தோன்றுகின்றன. இங்குள்ளவர்கள் இதனைச் சாளக்கிராவா என்று அழைக்கின்றனர். 
* சாளக்கிராமங்கள் எந்தவிதமான வண்ணத்தில் அமைந்துள்ளனவோ, அந்த ரூபங்கொண்ட விஷ்ணுவாசம் செய்யும் ஸ்தலமாகவே அவைகள் கருதப்படுகின்றன.
A. வெண்மை நிற சாளக்கிராமம் - வாசுதேவ க்ஷேத்திரம் B. கருமை நிற சாளக்கிராமம் - விஷ்ணு க்ஷேத்திரம் C. பச்சை நிற சாளக்கிராமம் - ஸ்ரீநாராயண க்ஷேத்திரம் D. பசும்பொன் (அ) மஞ்சள் கலந் சிகப்பு நிற சாளக்கிராமம் - ஸ்ரீநரசிம்ம க்ஷேத்திரம் E. மஞ்சள் நிற சாளக்கிராமம் - வாமன க்ஷேத்திரம் F. கருநீல நிற சாளக்கிராமம் - ஸ்ரீகிருஷ்ண க்ஷேத்திரம் 

* சாளக்கிராமங்களின் வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜாபலன்களும் மாறுபடுகின்றனவாம். 
நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் பச்சை - பலம், தைரியம் வெண்மை - ஞானம், பக்தி, மோட்சம் கருப்பு - புகழ், பெருமை புகை நிறம் - துக்கம், தரித்திரம் 

* சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமன்றி அவற்றில் 14 உலோகங்கள் (உலோகங்களின் சக்திகள்) இருப்பதாகக் கூறப்படுகிறது. 
* பூஜிக்கப்பட்ட சாளக்கிராமங்களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளவேண்டுமென்பது நியதி. 
* சாளக்கிராமங்களை பால் அல்லது அரிசி மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் அதன் எடை முன்பு இருந்ததை விட கூடுதலாக இருக்கும். 
* துண்டிக்கப்பட்டிருந்தாலும் அல்லது விரிந்து போனதாய் இருந்தாலும் சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை. 
* சாளக்கிராமம் உடைந்திருந்தாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும். 
* சாளக்கிராமம் விற்பனை செய்வதை வாங்குதல் நன்றன்று.பெரியவர்களின் கையிலிருந்து வாங்குதல் நன்று அல்லது பிறரால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தைப் பெற்றுக் கொள்வதும் நன்று. 
* நேபாளத்தில் கடைத்தெருவில் இதைக் குவித்து வைத்து விற்கிறார்கள். இதன் மீது புனித நீரை தெளித்துப் பூக்களைச் சொரிந்து புனிதப் படுத்தி விற்கிறார்கள்.இருப்பினும் இங்கிருக்கும் பெரியவர்கள் அல்லது சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில் வாங்குதல் சிறப்பு. 
* சுமார் 20 ஆண்டுகட்கு முன்பு இராமேஸ்வரத்தில் ஏற்பட்ட ஒரு புயலின் போது கடலில் ஒரு சாளக்கிராமம் கிடைக்க அதனை ஸ்ரீராமர் பாதம் அமைந்திருக்கும் கந்தமான பர்வதம் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் (இராமேஸ்வரம் கோவிலிலிருந்து வடக்கே 5 மைல்) வைக்கப்பட்டுள்ளது.தேங்காயளவு பருமனான இந்தச் சாளக்கிராமத்தில் நரசிம்ம மூர்த்தியின் திருமுகம் ரேகை வடிவில் அமைந்துள்ளது. 
* நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது. இதுதான் சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான் அமைந்துள்ளது. இருப்பினும் காட்மண்டுவிலிருந்து முக்தி நாராயணசேத்திரம் செல்லும் வழியில் உள்ள பூஜைக்குரிய சாளக்கிராமங்கள் உற்பத்தியாகக் கூடிய கண்டகி நதிக் கரையில்அமைந்துள்ள சேத்திரமே சாளக்கிராமமாகும். இவ்விடத்திற்குச் செல்ல நேபாள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. மலையேறிச்செல்ல வேண்டிய சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த யாத்திரையில் 50 பேர்கொண்ட குழுக்களாகச் செல்லவே நேபாள அரசு அனுமதியளிக்கிறது. 
* பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மொத்தம் 12 பாசுரங்களில்மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாக தலைக் கட்டுகிறார். திருமங்கையாழ்வார் ராமனாக காண்கிறார். இத்தலத்திற்கு திருமங்கை உகந்தருளிய பாசுரங்களில் இங்கு எழுந்தருளியிருப்பவன் ராமனே என்று அறுதியிடுகிறார். 
* ஸ்ரீஇராமானுஜர் இங்கு எழுந்தருளியுள்ளார். 
* இங்கு பகவான் தீர்த்த ரூபியாவார். 
* வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்குகந்த எம்பெருமான் இதில் நித்ய அவதாரம் (சாளக்கிராமரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பதும் ஓர் வரலாறு.
* சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. 











































பச்சரிசியை ஏன் தானமாக வழங்வேண்டும் ?                                                                               ************************************************************* 




உணவு வகைகளிலேயே சைவம், அசைவம் என்று உள்ளது போல் காய்கறிகளில் கூட சைவம், அசைவம் என்று முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர்.

அந்த வகையில் தேன், ரத்தத்திற்கு இணையானது என அதர்வண வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. 
ரத்தத்தை வழங்க முடியாதவர்கள் தேனை வழங்கி அதற்குண்டான பலனைப் பெற முடியும். ஹோம குண்டங்களில் தேன் வார்ப்பது தற்போதும் நடைமுறையில் உள்ளது. 

அதேபோல் பேரிச்சம்பழம், மாமிசத்திற்கு சமம் என்றும் பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பச்சரிசி மிகவும் சக்தி வாய்ந்தது. 

திருமணத்தின் போது முனை முறையாத பச்சரிசியைத்தான் அட்சதைக்காக பயன்படுத்த வேண்டும். 
இதனைக் கைக்குத்தல் அரிசி என்றும் கூறுவர். 
எனவே கடைகளில் பச்சரிசி வாங்கி வந்து அட்சதை தயார் செய்வது கூடாது. 
மாறாக விவசாயிகளிடம் சென்று அறுவடையின் போது சேகரித்து வைத்த முனை முறியாத பச்சரிசியை வாங்கி வந்து அட்சதை தயாரிப்பதுதான் சரியான முறையாகும்.

கைக்குத்தல் அரிசியைத்தான் தானமாக வழங்கவும் பயன்படுத்த வேண்டும். 

ஞானத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களுக்கு பச்சரிசியை தானமாக வழங்கினால் சிறந்த பலன் கிடைக்கும். 
இதற்கு காரணம் பச்சரிசிக்கு என்று தனி மகத்துவம் உள்ளது. 
முனை முறியாத பச்சரிசியை உயர்ந்தவர்களுக்கு தானமாக வழங்கினால் அதைக் கொடுப்பவருடைய தோஷங்கள் அனைத்தும் கழிந்துவிடும் என்று பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பூஜைகளுக்கு வாழைப்பழம் (கதளி) பயன்படுத்த வேண்டும். 

கேரளாவில் பகவதி அம்மன் கோயில்களில் கதளி இல்லாமல் பூஜைகள் நடத்தப்படாது. 
பச்சை வாழை, கற்பூர வாழை என பல்வேறு வகையான வாழைகளை பூஜைகளுக்கு யன்படுத்துகின்றனர். 
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்களும், பலன்களும் உள்ளது.
குறிப்பாக பச்சை வாழையை வன / காவல் தெய்வங்களுக்கும், பூவன் வாழையை வீட்டு தெய்வங்களுக்கும் பூஜை செய்ய பயன்படுத்தலாம்.

வாழைக்காய் / பழங்களை கைகளால் தொட்டு அந்தணர்களுக்கு வழங்கும் போது கொடுப்ப்வருக்கு உள்ள கர்ம வினைகள் பாதி தீர்ந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னோர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது கூட வேதம் ஓதும் அந்தணர்களுக்கு வாழைக்காய் / பழம் மற்றும் பச்சரிசி வைத்து வழங்குவர்.

இது சம்பந்தப்பட்ட வீடு (உயிரிழந்தவர்) மற்றும் அதில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் தோஷத்தைப் போக்கவே. 

அந்தணர்களும் அவற்றை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுடைய தோஷத்தை ஏற்றுக் கொண்டு அதை கழிப்பதாகவே பழங்காலத்தில் கருதினர்.

பழங்காலத்தில் ஒரு ஊரில் வசிக்கும் மற்ற குடும்பங்களுக்கு ஏற்படும் தோஷத்தை கழிக்கவே அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர். 

அதற்காக மக்களிடம் இருந்து எதையும் அவர்கள் எதிர்பார்த்ததில்லை. 
மாறாக அந்நாட்டின் அரசன் அந்தணர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள், செல்வங்களையும் அளித்ததாக வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. 

எனவே, முனை முறியாத பச்சரிசி, வாழைப்பழம் ஆகியவற்றிற்கு பல பூர்வீக குணங்கள் உண்டு. 

முக்கியமான சில பூஜைகளின் போது; கலச பூஜை உட்பட முனை முறியாத பச்சரிசியை பயன்படுத்தப்படுவதை தற்போதும் பார்க்கிறோம்.

கோயில்களில் நெய்வேத்தியம் செய்ய முழுக்க முழுக்க பச்சரிசியே பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் மாக்கோலம் இடுவதற்கும் பச்சரிசியை பயன்படுத்தினால் தெய்வீகத்தன்மை கிடைக்கும்.

அட்சய திருதியை தினத்தன்று முனை முறியாத பச்சரிசியை வாங்குவதும், தானமாக வழங்குவதன் மூலமும் லட்சுமியின் அருளைப் பெற முடியும்